பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ரஜனி அன்ரன்

மூத்தோர் திங்களில்….” முத்துக்கள் இரண்டு “கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.03.2023

என்னிரு கண்களைப் போல்
எனக்கும் அண்ணாக்கள் இருவர்
அக்காவிற்கு அன்புத் தம்பிகள்
எம் மூவருக்கும் முத்தான அண்ணாக்கள்
எமைத் தாங்கிய மூத்த உறவுகள்
எமக்காகவே வாழ்ந்த வாழும் உறவுகள் !

அண்ணன்கள் இருவரும்
வர்த்தகத் துறையினில் கல்வியினைக் கற்று
பெரியண்ணா யாழ் பல்கலைக்கழக நூலகத்தில்
நூலகவியலாளராகப் பணியினை ஆற்ற
நாட்டின் சூழ்நிலை காரணமாக
நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தார் சின்னண்ணாவும்
குடும்பமாகி பிள்ளைகளோடு தொடர்கிறது வாழ்வும் !

பிஞ்சு வயதினிலே நாம் தந்தையை இழந்தபோது
தந்தைக்குத் தந்தையாகத் தாங்கி நின்று
தங்கைகளுக்கு தந்தையாகவே வாழ்ந்து
சிந்தையில் நிறைந்து சீரினைத் தந்து
கல்விப் பாதையில் கரையேற்றி வைத்து
வாழ்வின் நிமித்தம் புலத்திற்கும் அழைத்து
வாழ்வினையும் அமைத்துத் தந்த
என் அண்ணாக்களுக்கு நவில்கின்றேன் நன்றி !

மூத்தோரைப் போற்றும் திங்களில்
முத்துக்களாம் என் அண்ணாக்கள்
முத்தாப்பாய் என்றும் சுகநலத்தோடும்
நீடு புகழோடும் நீடூழி வாழ
வாழும் போதே வாழ்த்தி மகிழ்கிறேன்
களம் தந்த பாமுகத்திற்கு நன்றி நன்றி !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading