புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கரையும் தண்ணீரில்,நிறையும் கழிவுகள் “கவி..ரஜனி அன்ரன்(B.A)30.03.2023

இயற்கை அன்னையின் கொடையினை
கண்டங்களை ஒன்றிணைக்கும் கடலினை
கப்பல் போக்குவரத்தின் தளத்தினை
கடல் வாணிபத்தின் களத்தினை
வாழ்வின் ஆதார வளத்தினை
கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக்கி
கரையும் தண்ணீரில் கழிவுகளை நிறைக்கின்றனரே !

கடலை ரசிக்க காலாற நடக்க
சுத்தக் காற்றைச் சுவாசிக்க முடியல
தொற்றுக்களும் விரைவில் பரவ
சுற்றுச் சூழலும் மாசடைய
எண்ணைக் கழிவுகளும் நிறைந்து வழிய
நெகிழிகளும் நெளியுது கடலிலே
கழிவுகளினால் அழிவுகளே மிச்சம் !

கடல்வாழ் உயிரினங்கள் அழிய
அரியவகை உயிர்களும் அருகிப் போக
நிறைகின்ற கழிவுகளால் அழிவே
நிலை தடுமாறுகின்றாள் புவித்தாயும்
கண்ணீர் வடிக்கின்றாள் கடல்த்தாயும்
உயிர்நீராம் தண்ணீருக்கு ஊறா?
ஊற்றான நீருக்கும் இங்கு கேடா?
நிறையும் கழிவுகளால் குன்றுதே வாழ்வும் !

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading