பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கொண்டாட்டக் கோலங்கள் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 20.01.2022

பண்டிகைகள் விழாக்கள் கொண்டாட்டமென்றால்
வண்ண வண்ணக் கோலங்கள் வாசலை அலங்கரிக்க
கலைகளின் அம்சமாய் விரல்களின் வித்தகமாய்
கண்ணைக் கவருமே கண்கவர் கோலங்கள்
கொண்டாட்டத்தின் அடையாளமே கோலங்கள்
கோலங்களின் வண்ணங்கள் எண்ணங்களுக்குப் புத்துணர்வே !

கலாச்சாரத்தைப் பேண கற்பனை வளத்தைப் பெருக்க
கலையின் நுணுக்கங்களை வெளிப்படுத்த
விருந்தினர்களைக் கவர நினைவாற்றலை அதிகரிக்க
மங்களம் உண்டாக மகிழ்ச்சி பொங்க
உயிரினங்களுக்கும் விருந்தாக
மாக்கோலம் மலர்க்கோலம் புள்ளிக்கோலமென
மகிழ்வினைத் தருமே மங்கையரின் கோலங்கள் !

தமிழர் வாழ்வோடு இரண்டறக் கலந்து
பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு
பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக் காத்த
கொண்டாட்டங்கள் இன்று கோலங்கள் மாறி
கேளிக்கை நிகழ்வுகளாகி பந்தா காட்டி
கொண்டாட்டக் கோலங்கள் கேலிக்குரியதாகி
அலங்கோலமாக அரங்கேறுகின்றதுவே
காலத்தின் கோலமாக !

Nada Mohan
Author: Nada Mohan