22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
ரஜனி அன்ரன்
< “ பூக்கட்டும் புன்னகை “……கவி….ரஜனி அன்ரன்(B.A) 03.02.2022
பூத்த புத்தாண்டில் புதுமைகள் பிறக்கட்டும்
நேற்று நடந்தவைகள் கனவாய் போகட்டும்
தொற்றுக்களும் தோற்றுப் போகட்டும்
மன இறுக்கங்கள் தளரட்டும்
மாற்றம் கண்டு மகிழ்வு பெருகட்டும்
வெற்றிகள் பலவும் வந்து சேரட்டும்
பூங்காற்றும் மெல்லத் தவழட்டும்
புன்னகைப் பூக்களும் பூத்துக் குலுங்கட்டும் !
மொழிகளில் உரைக்காத காவியம்
விழிகளில் ஒளிரும் ஓவியம்
வசீகரத்தின் வற்றாத ஜீவிதம்
வார்த்தைகள் இன்றிய மெளனம்
உதடுகளுக்கே உரித்தான தனித்துவம்
புன்னகை எனும் மகத்துவம் !
மழலையின் புன்னகையில் குதூகலம் மின்னும்
மங்கையின் புன்னகையில் காதல் அரும்பும்
பாட்டியின் புன்னகையில் அனுபவம் தெறிக்கும்
இதழ்களை மெல்ல விரியுங்கள்
புன்னகைப் பூக்களைச் சொரியுங்கள்
புத்துணர்வோடு வாழுங்கள்
பூக்கட்டும் எங்கும் புன்னகைப் பூக்கள் !

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...