கணப்பொழுதில்
கணப்பொழுதில்
ரஜனி அன்ரன்
“ பேராசான் கைலாசபதி “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 06.04.2023
உலகறிந்த தமிழ் அறிஞன்
பல்கலை வித்தகன்
யாழ் பல்கலைக்கழகத்தில்
தலைவராய் கலைத்துறைத் தலைவராய்
துணைவேந்தராய் பணியாற்றிய அறிஞன்
திறனாய்வின் முன்னோடி
பழந்தமிழ் இலக்கிய ஆய்வாளன்
நவீன இலக்கியங்களைப் புடம்போட்ட தீரன்
ஏப்ரல் ஐந்தில் உதித்தாரே !
இலக்கியத்தில் திறனாய்வு செய்து
இலக்கியம் இதழ் கல்வித் துறையென
பரந்து விரிந்தது பேராசானின் பணி
பத்திரிகைத் தொழிலிலும் பதித்தார் கால்
பணியினை ஆற்றினார் தினகரனிலும்
இளங்கலைமாணி முதுகலைமாணியாகி
இங்கிலாந்தின் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில்
கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றாரே !
இலக்கியத் துறைக்கு சேவைகள் செய்து
இலக்கியமும் திறனாய்வும் ஒப்பியல் இலக்கியம்
பண்டைத்தமிழர் வாழ்வும் வளமுமென
இலக்கிய நூல்கள் பலதையும் ஆக்கி
ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு
ஈடில்லா சேவைகள் செய்து
அகவை நாற்பத்தி ஒன்பதிலே
இவ்வுலகை விட்டு ஏகினாரே !
