மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பசுமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.03.2022

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த அற்புதம்
பசுமையெனும் வளம்
செழுமை சேர்க்கும் திறன்
பசுமையின் செழிப்பு பாருக்கே வனப்பு !

நீண்ட நெடிய வானம்
விரிந்து கிடக்கும் பூமி
பரந்து இருக்கும் கடல்
உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆங்காங்கே சமவெளிகள் பள்ளத்தாக்குகள்
ஆறுகள் குளங்கள் ஏரிகள் நீர்நிலைகள்
அடர்ந்த வனங்கள் மரஞ்செடி கொடிகள்
அத்தனையும் மொத்தமாய் பசுமையின் வனப்பே !

பச்சைக் கம்பளம் விரித்த புல்வெளிகள்
இச்சை தரும் பச்சை வண்ணம்
மனதிற்கு இனிமையாய் மகிழ்வின் உச்சமாய்
புத்துணர்வைத் தருவது பசுமை
பூமியைப் பசுமையாக்க பசுமைஇயக்கம்
மக்களுக்கு பசுமையைப் புகட்ட பசுமைக்கட்சி
விவசாயத்தில் பசுமையைப் பேண பசுமைப்புரட்சி
பூமியின் வளத்திற்கு வனப்பு பசுமையே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading