ரஜனி அன்ரன்

“ பூமித்தாய் “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 20.04.2023

அழகான ஒரு கோளம்
அடுக்குகள் கொண்ட மாடம்
அடைக்கலம் தந்த கூடம்
அதிசயங்கள் நிறைந்த தடாகம்
ஆதவனைச் சுற்றிவரும் ஆரணங்கு – இவள்
ஆதியாய் உதித்த அன்னை பூமித்தாயே !

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த பொக்கிஷம்
உலகையே சுமக்கும் தாய்மடி
உன்னதமான பூமித் தாய்மடி
பூமித்தாய்க்கென ஓர் தினத்தை
முத்தாப்பாய் தந்ததே ஐ.நா மன்றும்
சித்திரைத் திங்கள் இருபத்தியிரண்டினை !

எழில் மிகுந்து சோலைகள் மலர்ந்து
எண்ணற்ற வளங்களை அள்ளித் தந்து
எண்ணூறு கோடி மக்களையும்
எண்ணில்லா ஜீவராசிகளையும்
கண்போல காத்து தன்மடியினில் சுமந்து
உயிர்வாழ வைக்கும் உத்தமியை
உரமான வரமாகக் கிடைத்த பூமித்தாயை
உணர்வோடு வளம் சேர்ப்போம் என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading