புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பூமித்தாய் “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 20.04.2023

அழகான ஒரு கோளம்
அடுக்குகள் கொண்ட மாடம்
அடைக்கலம் தந்த கூடம்
அதிசயங்கள் நிறைந்த தடாகம்
ஆதவனைச் சுற்றிவரும் ஆரணங்கு – இவள்
ஆதியாய் உதித்த அன்னை பூமித்தாயே !

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த பொக்கிஷம்
உலகையே சுமக்கும் தாய்மடி
உன்னதமான பூமித் தாய்மடி
பூமித்தாய்க்கென ஓர் தினத்தை
முத்தாப்பாய் தந்ததே ஐ.நா மன்றும்
சித்திரைத் திங்கள் இருபத்தியிரண்டினை !

எழில் மிகுந்து சோலைகள் மலர்ந்து
எண்ணற்ற வளங்களை அள்ளித் தந்து
எண்ணூறு கோடி மக்களையும்
எண்ணில்லா ஜீவராசிகளையும்
கண்போல காத்து தன்மடியினில் சுமந்து
உயிர்வாழ வைக்கும் உத்தமியை
உரமான வரமாகக் கிடைத்த பூமித்தாயை
உணர்வோடு வளம் சேர்ப்போம் என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading