ரஜனி அன்ரன்

“ பன்மொழிகளே பலம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.09.2022

பன்மொழி போற்றும் புரட்டாதித் திங்கள்
பாங்குடனே விடைபெறும் வேளை
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாம்
புரட்டாதித் திங்கள் முப்பதாம் நாளை
பல்லுலகிற்கும் அறிவித்து மகிழுது ஐ.நா.மன்றும் !

எண்ணத்தின் வெளிப்பாடாகி சிந்தனையின் ஊற்றாகி
உணர்வின் கலவையாகி உன்னதமாகி
தொடர்பாடலுக்கும் பரிமாறலுக்கும் பாலமாகி
மொழியப்படுவதே மொழி
பன்மொழிக் கல்வி புரிதலை ஊக்குவித்து
நல்லுறவிற்கு வழி வகுக்குமே
வாழ்வியல் மொழி தாய்மொழி – என்
வாழ்விட மொழியோ டொச்மொழி !

பல்லின மக்கள் வாழும் புலத்து வாழ்வினில்
பல்லினக் கலாச்சாரமும் மிளிர
பன்மொழிகளை நாமும் கற்றால்
பலதையும் பத்தையும் அறியலாம்
பயனுறு வாழ்விற்கும் வலுவாகும்
பன்மொழிகளே எமக்குப் பலம்
பன்மொழிகளையும் கற்போம்
தாய்மொழியோடு வாழ்வோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading