06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
ரஜனி அன்ரன்
“நேயம்”…..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 17.08.2023
உயிரோடும் உயிர்ப்போடும் வாழ
உன்னதமானது நேயம்
நேசம் கொண்டு நேயம் காப்போம்
அறிவிருந்தும் ஆளுமை இருந்தும்
அதிகார பலம் இருந்தும்
நேயம் இன்றிய வாழ்வு
நேசமில்லா சுயநல வாழ்வே !
அவலக் குரல் கேட்டால்
துடித்தெழும் வேகமும்
ஆதரவுக் கரம் கொடுக்கும் இணைவும்
ஆபத்தில் கை தூக்கிவிடும் நேயமும்
மனிதநேயப் பண்புகள்
நேயம் காப்போம் நேசத்தோடு !
பொன்னைப் பொருளை மண்ணைத் தேடி
அலைந்து திரிகிறான் மனிதன் இன்று
சொந்த பந்தம் சுற்றுச்சூழல் மறந்து
சுற்றித் திரிகிறான் சுயநலவாதியாய்
மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பு நடாத்தி
குளிர் காய்கிறான் மகிழ்வோடு
வாழ்வோம் நேயத்தோடு
மலரட்டும் எங்கும் மனிதநேயம் !
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...