” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது?..ரஜனி அன்ரன் (B.A)19.01.2023

அறிவின் தேடலை ஆற்றலின் முனைப்பினை
இயல்பின் உந்தலை ஈகையின் பெருமையை
நம்பிக்கை உணர்வினை நாளைய கனவினை
நமதாக்கிட வலிமையைத் துடுப்பாக்கி
பெருகிடும் ஆண்டினைப் பெருமையாக்கி
மெருகூட்டுவோம் வலிமை கொண்டு !

ஆற்றல் பெருக ஆளுமை மிளிர
போற்றலும் புரிதலும் துணையாகிட
வளம் பெருகிட வல்லமை ஓங்கிட
வலிமையோடு வாழ்வும் நகர்ந்திட
படைப்புக்களும் பல்கிப் பெருகிட
தங்கு தடையின்றிப்
பொங்கிப் பெருகட்டும் வலிமை !

தரணியில் தடம் பதிக்க
தடைகள் என்று இங்கு எதுவுமில்லை
தடையினை உடைத்து முனைப்போடு உயர
நீடு புகழினை நேர்த்தியாக்கிட
வாழ்வினை மெருகிட வளமினை உரமிட
பெருகட்டும் எங்கும் வலிமை !

Nada Mohan
Author: Nada Mohan