புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.06.23
கவி இலக்கம்-107
பசுமை

அகலாத ஞாபகங்கள் ஆழமாய்
விரிய எமக்குள் ஆயிரமாயிரம்
பெருமூச்சில் துடிப்பு

பசுமை நினைவுகளின் வாசம்
சோர்ந்தவரை உசுப்பி எழுப்பும்
பூரிப்பு

துள்ளித் திரிந்த காலம்
பள்ளியில் செய்த குறும்பு

இலாச்சியில் பொரி விளாங்காய்
ஒளிச்சு வைத்து உண்ட சுவைப்பு

நாவற்பழம் தின்று வெள்ளைச்
சட்டையை கத்தரிப்பு நீலம்
கறையாக்கிய சிரிப்பு

தென்னை மரப் பொந்தில்
ஒளித்திருந்த கிளிகள்
பச்சை மிளகாய் கொத்தி
உண்ணும் துடிப்பு

அம்மே அம்மே எனக்
கத்தியபடி பிறந்த உடனே
தெத்தித் தெத்திப் பின்னால்
துரத்தும் ஆட்டுக் குட்டி நடிப்பு

கோழிக் குஞ்சுக்கு குங்குமச் சாயம்
பூசிக் கழுகுப் பார்வையில் இருந்து
தப்பிக்க வைத்த சோடிப்பு

பச்சைப் பசேலாய் மனக் கண்ணில்
அசைந்து நடனமாடும் நெல் வயலும்
தென்னஞ் சோலையும்

மறக்கவே முடியாத அன்றைய
பூரிப்பான பசுமை நினைவுகளே

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading