16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
11.07.23
கவி இலக்கம்-109
பாட்டி
குழந்தை ஒன்று பிறக்கையில்
கூடவே பாட்டியும் புதிதாய்ப்
பிறக்கிறாள் என்றாரே
பெண் கவிஞர் அலைஸ் வாக்கர்
பட்டுப் புடவையை கொசுவமிட்டு
உடுக்கும் பாட்டியும் சரிகை
வேட்டி மீசைத் தாத்தாவும்
கூட்டுக் குடும்பமானால்
குதூகலமே
பாட்டி சுட்ட வடையைக்
கோட்டை விட்ட காக்கா
எடுத்துக் கொண்டு காட்டுள்
ஓடிய தந்திர நரி கதை
கேட்டதும் ஆனந்தமே
போட்டி நாட்டும் பழமொழி
வாட்டி விடும் விடுகதை
சொடுக்குப் போட்டால்
சிறுவருக்கு இரட்டிப்பு
மகிழ்வே
தடுக்குப் பாய் உழைத்து
தம்பி தங்கை அதில் கிடத்தி
பார்த்துச் சிரிக்கும் புன்னகை
பாட்டிக்கும் பேரானந்தமே
கொட்டைப் பாக்கு வெற்றிலை
போட்டு கட்டை விரல் அமத்தி
உரலில் இடித்து பொக்கை
வாயில் சப்பித் துப்பும்
பாட்டியின் அழகுச் சிரிப்போ
அழகு .
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...