அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.09.23
ஆக்கம் -114
மலைப்பு

உறங்க மறுத்த விழிகளின்
தன் ஊமைப் பசிக்கு
உணவாக்கிய பிரமிப்பு

ஆறறிவு மனிதனை
மலைப்பாம்பு முழுதாய்
விழுங்கிய மலைப்பு

வானளவு உயர்ந்த கட்டிடம்
சிங்கப்பூரில் பார்த்து
மகிழ்ந்த வியப்பு

குதித்துக் குதித்து கொதித்து
எழுந்து குரல் எழுப்பும்
கனடா நயகரா நீர்வீழ்ச்சி
கண்ட பிரமிப்பு

இராமேஸ்வரம் போகும்
வழியில் பாம்பன் பாலம்
கடந்தது திகைப்பு

இறங்கி நின்று பார்த்ததும்
அலைகடல் துரத்தி துள்ளி
எழுந்த நுரை அள்ளித்
தலையில் கொட்டியதும்
அலையின் உழைப்போ
மலைப்பானது .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading