தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.02.23
ஆக்கம்-258
சுதந்திரமாமே
சுதந்திரமாமே எங்கே என்று
வாய் பிளக்கிறதே
1948 ல் எம் நாடும் ஆங்கிலேயரால்
சுதந்திரமானதே
அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்,
சிங்கள,முஸ்லீம் இனப்பிரச்சனை
முரண்பாடாய் மூண்டு கொண்டதே

எந்த ஆட்சி வந்தாலும் எப்படிப்
போரடினாலும் ஏமாற்றமே
இம்மியளவும் இனப்பிரசசனை
தீராத ஒன்றே
ஆனால் மந்திரிமாரின் தந்திரமோ
மாந்திரிகளின் மந்திர வித்தையானதே

பள்ளி படிப்பில்லை,படித்தால்
வேலையில்லை,உண்ண உணவோ
இருக்க வீடோ ,நோய்க்கு மருந்தோ
எதுவுமில்லாது என்னதான் செய்வான்
மனிதன்

துடிக்கும் அவனோ குடியைக் குடித்தும்,
போதையில் மயங்கி பாதை மாறிய
பயணமதில் விபரீத மரணங்கள்
பிடிப்பில்லா வாழ்வு தூக்கில்
தொங்கிடுதே

நடித்து நாடகம் போடும் நம்மின
அரசியல்வாதிகளும் தன்னலங்கருதி
குப்பாடி அரசியலின் கூட்டுச் சேர்ப்பில்
எங்கே சுதந்திரமாம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading