சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.12.23
கவி இலக்கம் -296
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
தொடர்ந்து தந்த அன்பில்
படர்ந்த சொந்தமின்றிய
பந்தம் தந்த பிணைப்பு

பெற்றெடுத்த பிள்ளையாய்
ஊற்றெடுத்த அகதி மண்ணில்
எமை உப்பு மூடை சுமந்த
ஜேர்மன் பெற்றோர் பூரிப்பு

செய்த உதவியோ உச்சம்
எழுதவே முடியாத மிச்சம்
முழுதாகத் தாயகப் பிரிவு
மறக்க உபசரித்த உள்ளம்

இரண்டும் இவ் உலகை
விட்டுப் பிரிந்ததே எமை
வாட்டி வதைக்கும் மறக்க
முடியாத தாங்கொணாத்
துயரமே .

Nada Mohan
Author: Nada Mohan