சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.02.24
கவி இலக்கம் -303
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

வேற்று நாட்டில் மற்றவர்
துணையின்றி வாழ்பவர்
அவர்கட்கு ஒரு ஆறுதல்

வாடிய நோயால் வீட்டில்
முடைந்தவர்க்கு மிகவும்
நல்ல உற்றார் போல்
உரையாடல்

திகதி பார்த்துத் தீரா
வலியில் வாடுபவர்க்கு
உற்றுக் கேட்க இனிமை
ஆக்கம் நண்பன் போல்

அகதியாக தஞ்சம் புகுந்து
ஆதரவற்றோர்க்கு அருகில்
அமர்ந்து அரவணைக்கும்
உறவுகள் நண்பி போல

இரவு பகல் புரியாது ,நேரம்
போவது தெரியாது கற்கும்
இனிமை நிகழ்வு காற்றின்
வழி மொழியாகி வாழ்வு
தந்தாய் வறண்டு போன
இதயங்களிற்கு .

Nada Mohan
Author: Nada Mohan