16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.03.24
கவி இலக்கம் -137
வேலி அடைப்போம்
பாரினில் உருளும் போலி
போரினால் சூழும் சோலி
வேரினில் புரளும் பணக்
கூலி குறைவது தடுத்து
வேலி அடைப்போம்
சும்மா இருப்பினும் சுற்றிச்
சுற்றி நாற்புறமும் அலறித்
தொல்லையாகும் தொலைபேசி
அம்மா அவசர சிகிச்சை
அப்பா ஆழ்ந்த தூக்கம்
இப்ப விழுந்ததோ லொத்தரில்
ஐம்பது ரொக்கம் ரொக்கப்பரிசு
பொய் திரட்டி புரளி பிரட்டி
பாசம் கொட்டும் வேஷதாரிகள்
வெளியே வராது முட்கம்பி
வேலி அடைத்திடுவோம்
முனகும் வேதனை தீர்ந்திட
தினமும் சோதனை இனியும்
வேண்டவே வேண்டாமென்று
வேலி அடைப்போம் .
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...