இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.03.24
கவி இலக்கம்-307
விடியாத இரவொன்று

அடியாத மாடு படியாதென்றும்
முடிவிலா அரசியல் மாறாதென்றும்
துடிதுடித்து மரணிக்கும் மாந்தர்

கூழும் கஞ்சியும் குடிப்பினும்
வாழும் பொழுது நிம்மதி
குடித்துக் குடித்து மது, போதை
அடிமையாகும் சமுதாயம்

பள்ளி மாணவர் சீரழிய
படித்துப் பட்டமானவர்
வேலையின்றிப் பிழிய
பிடிக்கும் நோயுடன்
வெடிக்கும் வெட்டுக் குத்து

எப்போ சுதந்திரமென ஏங்கும்
காலைப் பொழுதில் மங்கும்
மாலைப் பொழுது

யாரைக் கடிந்து கொள்வது
வேரிலே விஷம் போரிலே
மாண்ட வேதனைக் கண்ணீர்
மிதக்கும் சோதனையில்
என்றும் விடியாத இரவொன்று .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading