நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.03.24
கவி இலக்கம்-307
விடியாத இரவொன்று

அடியாத மாடு படியாதென்றும்
முடிவிலா அரசியல் மாறாதென்றும்
துடிதுடித்து மரணிக்கும் மாந்தர்

கூழும் கஞ்சியும் குடிப்பினும்
வாழும் பொழுது நிம்மதி
குடித்துக் குடித்து மது, போதை
அடிமையாகும் சமுதாயம்

பள்ளி மாணவர் சீரழிய
படித்துப் பட்டமானவர்
வேலையின்றிப் பிழிய
பிடிக்கும் நோயுடன்
வெடிக்கும் வெட்டுக் குத்து

எப்போ சுதந்திரமென ஏங்கும்
காலைப் பொழுதில் மங்கும்
மாலைப் பொழுது

யாரைக் கடிந்து கொள்வது
வேரிலே விஷம் போரிலே
மாண்ட வேதனைக் கண்ணீர்
மிதக்கும் சோதனையில்
என்றும் விடியாத இரவொன்று .

Nada Mohan
Author: Nada Mohan