மூளும் மாயைகள்

ராணி சம்பந்தர்

கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்

மூளும் மாயை உலகமதிலே
தாயே தான் பெற்ற பிள்ளை
கூட்டிக் குடுக்கும் பரிதாபமே

ஆளும் அரசுக்கோ தலையிடி
களுத்து முட்டப் பேரிடி அவலம்
நாளும் பொழுதும் சேருமந்தப்
போதை வஸ்துகளின் பம்பல்

பாழாய்ப்போன மானிட வர்க்கம்
வெந்து வெதும்பி நொந்துநூலாகி
சந்து பொந்தில் சொந்தமின்றியே
அனாதையாகச் செத்த மரண ஓலம்

சேர்ந்து தொடரும் சாலை விபத்தும்
படரும் கொலை ,கொள்ளைகளும்
தினந்தினம் அதிகரிக்க மனமோ
உழைச்சலாகி வேறு திசையிலே
திருப்புதே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading