தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.03.24
கவி இலக்கம்-307
விடியாத இரவொன்று

அடியாத மாடு படியாதென்றும்
முடிவிலா அரசியல் மாறாதென்றும்
துடிதுடித்து மரணிக்கும் மாந்தர்

கூழும் கஞ்சியும் குடிப்பினும்
வாழும் பொழுது நிம்மதி
குடித்துக் குடித்து மது, போதை
அடிமையாகும் சமுதாயம்

பள்ளி மாணவர் சீரழிய
படித்துப் பட்டமானவர்
வேலையின்றிப் பிழிய
பிடிக்கும் நோயுடன்
வெடிக்கும் வெட்டுக் குத்து

எப்போ சுதந்திரமென ஏங்கும்
காலைப் பொழுதில் மங்கும்
மாலைப் பொழுது

யாரைக் கடிந்து கொள்வது
வேரிலே விஷம் போரிலே
மாண்ட வேதனைக் கண்ணீர்
மிதக்கும் சோதனையில்
என்றும் விடியாத இரவொன்று .

Nada Mohan
Author: Nada Mohan