ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.11.22
ஆக்கம்-85
நினைவு நாள்

தமிழுக்காகவும், தாய் மண்ணிற்காகவும்
தமிழினத்துக்கும், தாயக விடுதலைக்கும்
தூய நினைவுகளுடன் போராடித் தம்
இன்னுயிர் ஈந்த நினைவு நாள்
கார்த்திகை இருபத்தேழு

மாசற்ற இலட்சிய உறுதியுடன்
மரணத்துடன் மோதி மர்ணித்த
மண்ணின் மைந்தர் மாவீரர்
போற்றும் இந் நினைவு நாள்

நெஞ்சிலே விதைக்கப்பட்டு
வித்தாக விளைந்து விருட்சமாக
வளர்ந்திடும் வேளை
நய வஞ்சரால் நாசமாக்கப்பட்டு
மண்ணுள் உயிரோடு புதைந்த
மாவீரரின் சாகா வரம் பெற்ற
நினைவு நாளில் பூக்கள் தூவி
பாக்கள் பாடி மலரஞ்சலி செய்து
ஒளியேற்றி வணங்கிடுவோமே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading