ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.05.22
ஆக்கம் 226
நிலைமாறும் பசுமை
சுற்றும் உலகில் சூழல் மாறிட
பற்றிப் பிடிக்கும் மனித வாழ்வோ புதிரிட
முற்று முழுதாய்க் கானகமும் ,புல் வெளியும்
எரிந்து கருகிச் சாம்பலிட

சாக்குப் போக்குச் சொல்லி
நாட்டிய மரங்களை நாறாய்க் கிழித்து
அழித்திடவே ஆரம்பமானது பூகம்பம்

மலையின் பசுமை தெரியாது
கடலின் அருமை புரியாது
மலையைக் குடைந்து கம்பியினால்
கண்டபடி துளைத்து இயற்கையை
நரகமாக்கி மழையை நீக்கி
செயற்கையில் சேர்ந்து அழித்திட

நிலைமாறும் பசுமை போக்க
உலகெங்கும் ஆயிரமாயிரம்
மரங்கள் நாட்டி போற்றிப் பாதுகாத்திட
சர்வதேச தாவர தினமாகிய மே 12இல்
இயன்றவரை முயன்றிடுவோமாக

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading