ராணி சம்பந்தர்

28.03.2023
ஆக்கம் 96
நீர்க்குமிழி

விண்ணில் இருந்து
மண்ணிற்கு மழைத் துளி எனும் பெயரோடு
வீரியத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி

கண்ணில் பட்டதும்
காணாமல் கரைந்து போனதே

பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார நுரையில்
பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக்
காற்றோடு கலந்து
பறந்து போனதே

நினைவுகள் சுமந்த
கனவோடு காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில் பூத்த
வியர்வை எனும் நீர்க்குமிழி ஒரு
நொடிப்பொழுதில்
மறைந்து போனதே

நிரந்தரமற்ற நீண்ட
வாழ்வும் கூட பரந்த
உலகில் பிறந்த மனிதனில் நீர்க்குமிழி
போல் மண்ணில்
மறைந்து புதைந்து
போகுமே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading