மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர்

28.03.2023
ஆக்கம் 96
நீர்க்குமிழி

விண்ணில் இருந்து
மண்ணிற்கு மழைத் துளி எனும் பெயரோடு
வீரியத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி

கண்ணில் பட்டதும்
காணாமல் கரைந்து போனதே

பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார நுரையில்
பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக்
காற்றோடு கலந்து
பறந்து போனதே

நினைவுகள் சுமந்த
கனவோடு காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில் பூத்த
வியர்வை எனும் நீர்க்குமிழி ஒரு
நொடிப்பொழுதில்
மறைந்து போனதே

நிரந்தரமற்ற நீண்ட
வாழ்வும் கூட பரந்த
உலகில் பிறந்த மனிதனில் நீர்க்குமிழி
போல் மண்ணில்
மறைந்து புதைந்து
போகுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading