வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
அழகு…
அழகு அழகு தாயவள் அழகு
தரணியில் வாழ்வு
தனித்துவ அழகு

உள்ளத்தின் அழகில்
மெய்ப்படும் மேனி
இல்லத்தின் அழகில் ஈகை மிகையே
ஈரத்தின் வாழ்வில் கனிவது அன்பு

வையம் அழகில் வற்றாச் சுரங்கம்
வசப்பட வாழ்வது உயிர்களின் இன்பம்

அழகின் பின்னலில் ஆயிரம் கோலம்
அழகே உலகென
மிளிரும் வேளை
அவரவர் வாழ்வில்
அழகியல் பேசும்!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading