மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மூலதனம்

மூலதனம்
தேவைக்கு ஏற்ப தேவைப்படும்
தேசங்கள் முழுதும் தேடப்படும்
மூலப்பொருளாய் மூலதனம்
முதலீடாகும் முழஉலகும்
வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம்
வருமானத்திற்கும் வாழ்வு தரும்
உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும்
நல் நட்புக்கும் நம்பிக்கை உரம் கொடுக்கும்
அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும்
அன்புக்கும் இதுவே அடிப்பலம் கொடுக்கும்
காலத்திற்கு நேரம் மூலதனம்
கவிதைக்கும் கருவே மூலதனம்

இன்றைய சூழலின் எழுச்சிக்கு
ஊடகப் பணிகள் மூலதனம்
ஓற்றுமைக் குரலை ஒன்றிணைக்க
ஆற்றிடும் அளப்பெரும் சேவைகள் உயர்வுபெறும்

காத்திடம் அறிந்து கருக்கொண்டு
காரியம் ஆற்றிடும் ஆளுமையும்
ஓருவரின் முன்னேற்ற முனைப்புக்கு மூலதனம்
பணம் என்ற ஓன்று மட்டுமல்ல
பற்பல வளங்களும் மூலதனம்
உயிருக்கு சுவாசம் மூலதனம்
உடலுக்கு உயிரே மூலதனம்
ஆரோக்கியமே அனைத்திற்கும் மூலதனம்
அன்பும் அறனும் பொக்கிஷங்கள்
முதலீட்டு வாழ்வோம் மூலதனமாய்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading