வசந்தா ஜெகதீசன்

ஆசான்..
அகரத்தின் நிமிர்விலே ஏற்றி
அனுதினம் பாடம் புகட்டி
அனைத்திலும் திறமை தீட்டி
ஆசானாய் போற்றும் தகையே
அகிலத்தின் தொழில்துறை மேன்மை
துலங்கிடும் ஈகைக்கு உவமை
செய்தொழில் செம்மை ஆற்றும்
சேவைக்கு நிகரேது உலகில்

மனிதத்தின் மாண்பைப் போற்றி
அகிலத்தை அறிவொளியாக்கி
அநீதிக்கு குரலது எழுப்பும் சமூகத்தின் விழியதுவாகும் தொழில்களின் துறைசார் அறிஞரும் ஆசான் ஆற்றலின் வசமே
எத்துறை சார்ந்தும் எழுகையில் நிமிர்வார் எண்திசை வாழினும் கற்றலில் மிளிர் வார் வார்ப்புகள் ஒளிரும் வண்ணமாய் தீட்டும் ஆசான் பணிக்கு நிகரேது செப்பும்.
நன்றி நனிமிகு நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading