” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆசான்..
அகரத்தின் நிமிர்விலே ஏற்றி
அனுதினம் பாடம் புகட்டி
அனைத்திலும் திறமை தீட்டி
ஆசானாய் போற்றும் தகையே
அகிலத்தின் தொழில்துறை மேன்மை
துலங்கிடும் ஈகைக்கு உவமை
செய்தொழில் செம்மை ஆற்றும்
சேவைக்கு நிகரேது உலகில்

மனிதத்தின் மாண்பைப் போற்றி
அகிலத்தை அறிவொளியாக்கி
அநீதிக்கு குரலது எழுப்பும் சமூகத்தின் விழியதுவாகும் தொழில்களின் துறைசார் அறிஞரும் ஆசான் ஆற்றலின் வசமே
எத்துறை சார்ந்தும் எழுகையில் நிமிர்வார் எண்திசை வாழினும் கற்றலில் மிளிர் வார் வார்ப்புகள் ஒளிரும் வண்ணமாய் தீட்டும் ஆசான் பணிக்கு நிகரேது செப்பும்.
நன்றி நனிமிகு நன்றி

Nada Mohan
Author: Nada Mohan