இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

விடுதலையின் விதைப்பில்...

காலத்தின் தோகை
காசினியின் வேட்கை
ஞாலத்தில் நயம்படும்
நம்பிக்கை வேராகும்

ஆட்சியின் நிமிர்வு
ஆதிக்கப் பகிர்வு
நலிந்திட்ட பொழுது
நமக்கான கனவு

ரணங்களே கணமாய்
வலிகளே வதையாய்
சுவாசமே அனலாய்
சுவடுகள் சுடுமே

விடுதலை வேட்கையில்
வெற்றியின் நிஜத்திலே
எத்தனை விதைப்புக்கள்
எண்ணற்ற இழப்புக்கள்

கல்லறைக் காவியர்
கனவுகள் மெய்ப்பட
காசினி வசப்பட
கணதிகள் குன்றுமே

விடுதலை விதைப்புக்கள்
விடியலின் வேர்களாய்
விதைபட்டுயருமே
வேட்கையில் வெல்லுமே
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading