அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சுதந்திரமாமே…… .
ஆட்சித் செறிவின் அடித்தளம்
அகன்று போனது சுதந்திரம்
மீட்சிக்கான வீழ்ச்சியில்
மிடுக்கை இழந்தது தமிழினம்

வெற்றித் தொடுகை வீரச்செறிவு
புத்திக் கூர்மை நிறைந்ததமிழே
ஆண்ட நிலத்தை அன்னியர் பறித்தனர்
ஆங்கிலேயக் குடையை அகல விரித்தனர்
ஓன்றித்த வாழ்வென ஓரங்கம் பகிர்ந்தனர்
மீளவழங்கலில் காரியம் சிதைத்தனர்
ஆண்ட இனமது அடிமையானது
வேட்கை உடைந்தது வீரம் சிதைந்தது
மாட்சிமை மலிந்தது மண்ணினம் நலிந்து
நாளை சுதந்திரமாமே
எதற்காய் இது
விளக்கில் விட்டிலாய் வீழும்
எமக்கு எதற்காய் இது!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading