மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உருமாறும் புதிய கோலங்கள்……..
ஒடி நகருதே காலம்
ஒற்றுமை விதையிடும் நேரம்
வாடி நிற்கும் கொக்காய்
மாறி விடாது எழுவோம்
தேடிப் பயிரிடல் போலே
தேட்டங்கள் எங்கென ஓடு
நாட்டங்கள் உள்ளதை நாடு
தமிழ் ஓங்கி விதையிடும் வேளை
தனித்துவம் மிளிருமே நாளை
கடுகதிப் பொழுதினில் கணனி
காலத்தின் முத்திரை கவனி
ஞாலத்தில் நம்மின மிகுதி
நல்லாக்கத்தின் படைப்பே உறுதி
தேக்கத்தின் ஆழிக்குள் முத்தாய்
புது நாற்றென விதையிடு சொத்தாய்
காலத்தின் திரையே அவனி
கோலத்தில் புதுமையைக் கவனி
உருமாறிடும் யுத்திகள் பலதாய்
உலகே வியக்குமுன் எழு நீ.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan