பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

துளிநீர்….
ஆறாய் நதியாய் குளமாய் ஊற்றாய்
அருவி பாயுது நிலத்தில் வீச்சாய்
அச்சம் களைந்து தாகம் போக்கும்
நீரின் ஊற்றே நிறைந்த செல்வம்

சுத்தம் பேணும் சுகாதாரம் வாழும்
நித்தம் நீரே நிரம்பி வழியும்
பயிரின் வீச்சில் பசுமை நிறையும்
பாரே நீரால் பசிந்தாய் மலரும்

காரின் பிரசவம் துளியாய்ச் சிந்தும்
வானின் வருகை வளத்தைப் பெருக்கும்
ஞாலம் ஒளிர நற்கொடை நீரே
நாளும் வாழ நன்கொடை நீரே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading