தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

துளிநீர்….
ஆறாய் நதியாய் குளமாய் ஊற்றாய்
அருவி பாயுது நிலத்தில் வீச்சாய்
அச்சம் களைந்து தாகம் போக்கும்
நீரின் ஊற்றே நிறைந்த செல்வம்

சுத்தம் பேணும் சுகாதாரம் வாழும்
நித்தம் நீரே நிரம்பி வழியும்
பயிரின் வீச்சில் பசுமை நிறையும்
பாரே நீரால் பசிந்தாய் மலரும்

காரின் பிரசவம் துளியாய்ச் சிந்தும்
வானின் வருகை வளத்தைப் பெருக்கும்
ஞாலம் ஒளிர நற்கொடை நீரே
நாளும் வாழ நன்கொடை நீரே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading