அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

துளிநீர்….
ஆறாய் நதியாய் குளமாய் ஊற்றாய்
அருவி பாயுது நிலத்தில் வீச்சாய்
அச்சம் களைந்து தாகம் போக்கும்
நீரின் ஊற்றே நிறைந்த செல்வம்

சுத்தம் பேணும் சுகாதாரம் வாழும்
நித்தம் நீரே நிரம்பி வழியும்
பயிரின் வீச்சில் பசுமை நிறையும்
பாரே நீரால் பசிந்தாய் மலரும்

காரின் பிரசவம் துளியாய்ச் சிந்தும்
வானின் வருகை வளத்தைப் பெருக்கும்
ஞாலம் ஒளிர நற்கொடை நீரே
நாளும் வாழ நன்கொடை நீரே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading