” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அனுபவ ஆசான்…
ஒற்றைவழியில் ஒரு பயணம்
கற்றுத் தருமே பல பாடம்
வெற்றுத் தாளில் எழுத்தாகி
வெற்றி கூறும் உயர் ஆசான்

பட்டே தெளிந்தோர் பலராகும்
பாடுபட்டே உழைப்போர் வழிகூறும்
விட்டே அகலா விருட்சமிது
விளைவு கூறும் பட்டறிவே

நாளும் நாளும் நம்மோடு
நகரும் பொழுதின் சிந்தை போல்
வாழவில் தொடர்ந்தே வடம்பற்றும்
வற்றாச் சுரங்கம் இவ்வசான்
கற்றோம் பலதை கடல் போல
கல்வியென்னும் உயர்நிலைக்கு
கருத்தில் ஏதும் கபடமின்றி
பெற்றுத் தருமே பெரும் பாடம்
இதுவே எமது உயர்பீடம்.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan