வசந்தா ஜெகதீசன்

சித்திரையின் சித்திரங்கள்…
வலுவோடு எழுகின்ற விரிகதிரின் விவேகம்
வளமாக்கி தருகின்ற உலகின்கண் நிமிரும்
இளவேனில் தழுவும் இல்லங்கள் மிளிரும்
இயலுமே மிடுக்கு இல்லாமை விலக்கு
பசுமையின் படர்வு பகலாகும் உலகு
சித்திரைப் புலர்வு சிறக்குமே வாழ்வு
நம்பிக்கைத் திடமே நாளைக்கு உறுதி
சித்திரை வரையும் சித்திரைக் கோலம்
இத்தரை நிறையும் இன்னொரு பாகம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading