வசந்தா ஜெகதீசன்

சித்திரையின் சித்திரங்கள்…
வலுவோடு எழுகின்ற விரிகதிரின் விவேகம்
வளமாக்கி தருகின்ற உலகின்கண் நிமிரும்
இளவேனில் தழுவும் இல்லங்கள் மிளிரும்
இயலுமே மிடுக்கு இல்லாமை விலக்கு
பசுமையின் படர்வு பகலாகும் உலகு
சித்திரைப் புலர்வு சிறக்குமே வாழ்வு
நம்பிக்கைத் திடமே நாளைக்கு உறுதி
சித்திரை வரையும் சித்திரைக் கோலம்
இத்தரை நிறையும் இன்னொரு பாகம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading