வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தேடியவிழிக்குள் தேங்கியவலி….
காலத்தின் தோகை இருள்மூட
காணாமல் போனோர் வலிகூட
வதைபடும் உறவுகள் வலி ரணமே
வருவார் என்றிடும் உளம் கணம்

போரிடர் தந்த பேரிடர்
இரண்டாயிரம் நாளின் வலித்தொடர்
நலிந்து நலிந்து நூலாகி
நாள்பட்ட காயத்தின் ரணமாகி
உயிரின்றி ஊசலாடுகிறார்
உருக்குலைந்தே வாழ்வினை போக்குகிறார்

எத்தனை விம்பங்கள் எதிரொலியாய்
எதிர்ப்படும் முகங்கள் தம்முறவாய்
ஏங்கும் வாழ்வினைத் தாங்குவது
இடர்படும் நாட்கள் முள்ளாகி
எரிக்கும் உள்ளத்தின் அறைகூவல்
கேட்கும் எந்தன் தாய்நிலமே
கேள்விக்கு பதில் கூறாயோ
வாழ்விற்கு வழி செப்பாயோ

தேடியவிழி வலிக்கிறதே
தேசம்முழுதாய் துளைக்கிறதே
யாரென அறிவாய் நானிலமே
நாளையும் இதுவின்றி வாழவிடு
எங்கே தொலைத்தாய் எம்முறவை
வருவார் என்றிடும் வலி தணிய
வழியது தருமா வருங்காலம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading