மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தாமரைஇலை..
உறவாடும் உலகியலும் இதுவாகும் நடப்பு
ஒட்டியும் ஒட்டாமாலும் உறவாடும் சிறப்பு
எதிர்பார்ப்பின் முனைப்பிலே நடக்கிறது நட்பு
எதுவாகும் உறவிற்குள் விரிசலே வெறுப்பு

தூது வரும் வைபரில் எழுத்துக்களே எற்பு
தூரம் குன்றி வரும் நாளாந்த அழைப்பு
பாரமும் பாதையும் இன்றியே வாழ்வு
காரமும் சாரமும் விவாதமாய் விதைப்பு

கல்வியின் முடிச்சிலே கணனியே இணைப்பு
அறிவுசார் விருத்தியில் இல்லையே கணிப்பு
அன்றாடம் அறிதலில் முடியுதே படிப்பு
அனுபவ பட்டறிவு கிட்டாத வாழ்வு

நீரோடு உறவாடும் தாமரை இலைபோல
பெற்றோரும் பிள்ளைகளும் இதுவாகி நடிப்பு
இதுவானால் எதுவாகும் உறவிற்குள் பிடிப்பு
நகர்கின்ற நாட்பொழுது சான்றாகும் விழிப்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading