வசந்தா ஜெகதீசன்

திருநங்கை..
அர்த்தநாரிஸ்வராய்
அண்டத்தில் வாழ்வாய்
வாழ்வாங்கு வாழும் வலி
வாட்டும் தினம் பேரிடியாய்

உடைத்தெறிந்து உள்ளம் தெளிந்து
நிமிர்ந்து வாழ்தல் சிந்தை
நெறிபடுமே ஆளுமைக்குள் ஆற்றல்

பொதுமையென வழிகாட்டி
புதுப்பாதை திறனாக்கி
மதித்து வாழ்தல் மனிதம்
மகுடம் சூடும் நேயம்
உதித்தே விடியல் தரும் பரிதி
உலகெங்கும் பரவும் ஒளி ஒன்றே
மனிதமென்னும் உயிர்ப்பும்
அவனி வாழும் வெளிச்சம்.
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading