வசந்தா ஜெகதீசன்

வணக்கம்

தலையீடு….
முறையீடு முளைவிட்டால்
தலையீடு தற்காக்கும்
தகுந்தவழி காட்டும்
தேவையற்ற தலையீடு
பயனற்ற பயன்பாடு
புலம் தந்த பாடம்
தலையீடு தவிர்த்தலும்
தகுந்தபடி வாழ்தலும்
உறவிற்கும் உகந்தது
உரிமைக்கும் தகுந்தது
வாழ்விற்கும் வளமது
காலத்தின் கரிசனை
காப்பதே முறைமை.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading