வசந்தா ஜெகதீசன்

தீப ஒளியே….
திருப்பத்தின் திறவுகோல்
திசையெங்கும் நெம்புகோல்
முறைமையின் கடைப்பிடிப்பு
முன்னாளின் கதைத் தொகுப்பு
தீபத்தின் ஒளி நாளாய்
திசையெங்கும் பிரகாசம்
வாழ்த்தின் வனப்போடு
வாஞ்சை கொள் எழிலோடு
போற்றும் திருநாளாய்
புலரும் பொழுதாகும்
விழாக்களின் விழுமியமே
வரலாற்று சான்றாகும்
விளக்கொளியாய் பிரகாசம்
வித்திட்ட பயிர் போல
அறிவிற்கு ஆதாரம்
ஆன்றோரின் வழிகாட்டும்
ஆசூரத்தை பொசுக்கியே
அன்பிற்கு ஒளியான
ஞானத்தின் மெய்ப்படு
நல்வழியின் அறவாழ்வு.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading