கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

வண்ண வண்ணப் பூக்கள்…..

ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025

பூமித்தாயின் பூரிப்பில்
பூக்களெல்லாம் வரங்களே
பூமித்தாயை வனப்பாக்கி
பூவையரையும் மகிழ்வாக்குமே
ஆண்டவனுக்கு அர்ப்பணமாக
அர்ச்சனை மலர்களாகி ஆராதிக்குமே
தேனைத் தேடிவரும் தேனீக்கும்
தினம்தினம் திருவிழா இங்கேதான் !

கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
வண்ண வண்ணப் பூக்கள்
காலையில் மலர்வது அல்லிப்பூ
கருக்கலில் முகிழ்ப்பது மல்லிகைப்பூ
கதிரவன் வரவினில் தாமரைப்பூ
காதலின் சின்னம் ரோஜாப்பூ !

செம்பவள நிறமாம் செம்பருத்தி
செங்காந்தள் மலராம் எம்தேசீயப்பூ
செம்மஞ்சள் வண்ணமாம் செவ்வந்தி
கொத்தான பூவாம் சாமந்தி
கெத்தான அதிசயப்பூவாம் குறிஞ்சி
வாடும் பூவும் சொல்லும்
வாழ்வின் அழகு நிறைவில்தானென்று !

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading