புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வன்னியூர் முகுந்தன்

மே – பதினெட்டு முள்ளிவாய்க்கால் !.
*****–*****–*****
உலக வரலாற்றில்
இது எங்கள்
குருதி மை தொட்டு எழுதப்பட்ட தேதி!.

உலக நாட்காட்டியில்
துக்க நாளாக அடையாளமிடவேண்டிய
கறுப்புநாள் இது!

இந்த நாளை உச்சரிக்கும் போதே
உடற்கூறுகளில் குருதியோட்டம்
உறைந்து போகிறது இன்றும்……!.

இதயம் தன் இயக்கத்தை இழந்து
துடிப்பற்றுக் கிடப்பதான உணர்வு
உருப்பெற்று மறைகின்றது!.

உச்சந்தலையை இலக்குவைத்து
இடிமின்னல் விழுந்ததுபோல்
நாடி, நாளங்கள் செயலிழந்து போகிறது!.

உடற்கட்டை சடமாகிப்போவதான
இனப்புரியாதவோர் இறுக்கத்திற்குள்
அமிழ்த்தப் படுகிறது நெஞ்சம்!.

கந்தகக் குண்டுகளின்
கரும்புகை மண்டலம் இப்போதும்
கண்களை கலங்க வைக்கின்றன!.

குண்டுச் சன்னங்கள் அள்ளியெறிந்த
புழுதிமண்ணின் புகைப்படலங்கள்
உடல்களில் அப்புவதான ஓருணர்வு!

நாசித்துவாரங்களை அவை ஊடறுத்து
சுவாசத் தொகுதியை நிரப்புவதான
ஓர் நினைவு இன்றும்தான்!.

வானதிர வகைவகையாய் வந்த
இரசாயனக் குண்டுகளின்
கூவல் சந்தங்கள் இன்றும் செவிகளில்…..!

மணல் தரைகளெங்கும் வடிந்தோடி
ஊறிக்கிடந்த இரத்த வெடில்கள்
இன்றும் எம் சுவாசக் காற்றலையில்….!.

என்றுமறையும் இந்த நினைவுகள் ??

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading