வலியதோ முதுமை

Selvi Nithianandan (608) 28.03.2024
வலியதோ முதுமை
காலமும் வேகமாய் நகர
ஞாலமும் மாற்றமாய் சேர
சோகங்கள் பலதாய் தொடர
சோர்ந்திடும் சரீரம் உணர

வெளியிலே நடையும் இன்றி
வெயிலும் வரவும் குன்றி
வீட்டிலே சோர்வாய் தூக்கம்
விடிந்தால் எழுவதால் ஏக்கம்

மூட்டு முதுகு வலியாய்
காலும் வீக்கம் நோவாய்
படுக்கை இல்லா விழிப்பாய்
பயமும் துரத்த நினைப்பாய்

மூப்பு இன்றும் நிலையாம்
முனகும் செயலில் தொல்லையாம்
தீர்ப்பு அதுவே இல்லையாம்
தீர்க்க முடிவே வலியாகுமா?

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading