” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியதோ முதுமை

Selvi Nithianandan (608) 28.03.2024
வலியதோ முதுமை
காலமும் வேகமாய் நகர
ஞாலமும் மாற்றமாய் சேர
சோகங்கள் பலதாய் தொடர
சோர்ந்திடும் சரீரம் உணர

வெளியிலே நடையும் இன்றி
வெயிலும் வரவும் குன்றி
வீட்டிலே சோர்வாய் தூக்கம்
விடிந்தால் எழுவதால் ஏக்கம்

மூட்டு முதுகு வலியாய்
காலும் வீக்கம் நோவாய்
படுக்கை இல்லா விழிப்பாய்
பயமும் துரத்த நினைப்பாய்

மூப்பு இன்றும் நிலையாம்
முனகும் செயலில் தொல்லையாம்
தீர்ப்பு அதுவே இல்லையாம்
தீர்க்க முடிவே வலியாகுமா?

Nada Mohan
Author: Nada Mohan