10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
“வல்லமை தாராயோ”
நேவிஸ் பிலிப் கவி இல(375) 02/01/2025
நெஞ்சிலே துணிவோடு
நேர்கொண்ட பார்வையுமாய்
அஞ்சியஞ்சி வாழ்ந்திடாது
வஞ்சமகற்றி வாழ்ந்திடவே
மாற்றங்கள் தாராயோ
மலர்ந்திட்ட புத்தாண்டே,!!!
ஆலய மணியோசை ஒலித்திடவே
இல்லமெல்லாம் இன்னிசை பரவிடவே
மன இசைவு ,ஓரிசைவாயிணைந்திடவே
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
இறுகிய மனங்களெல்லாம்
தளையறுந்து மேன்மை கொள்ள
கண்ணியமாய் வாழ்ந்திடவே
திண்ணமாய் உறுதி கொள்ள
ஒரு கணமே போதுமானதாய்
தோல்வி கண்டு வீழ்ந்திட்டோம்
எழுந்தென்ன பயனெனவே
தயங்கிடாதே மயங்கிடாதே
வலிமை கொள் மனமே
காரிருள் ஊடறுத்து
கதிரவனும் ஒளியேற்ற
பரந்து விரிந்த பாரெல்லாம்
நமதேயென நம்பிக்கையோடு
பண்போடு வாழ்ந்திடுவோம்
மாற்றங்கள் கண்டிடுவோம்
ஏற்றங்கள்கொண்டிடுவோம்
வலிமை சேர்ப்போம்
நல்லினிய புத்தாண்டே
வல்லமை தாராயோ???
அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...