பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வாரம் 241

[ வாரம் 241 ]
“தீப ஒளியே”

தீபஒளியேற்றிய இறைவழிபாடு தமிழரின் சமயச்சடங்காகும்.
ஒளிவடிவையே இறைதோற்றமாக்குவதும் சைவசமயமாகும் .
பிறமதங்கள் தீபஒளியேற்றுதல் ஒருமைப்பாட்டின் அம்சமாகும்
மெழுகுதிரி ஏற்றி, எண்ணெய்த்தீபங்காட்டி, மின்விளக்கு அலங்காரமும் இறை வழிபாட்டுமுறையாகும்.

ஒளிபிறந்து அஞ்ஞான இருளகன்று மெஞ்ஞான ஒளிவீசும் தீபஒளி
ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை,ஒளியில்லா உலகிற்கே அர்த்தமில்லை
சூரிய ஒளியின்றி தாவரங்களுக்கோ உணவில்லை
தீப ஒளியில் வட்டமிடும் பூச்சிகள், தீபாராதனையில் பக்தர்கள், ஒளியின் கவர்ச்சி எங்கில்லை?

தீபஒளியின் மகத்துவம்காட்டும் ஒலிம்பிக்தீபம்
தீமையகற்றி நன்மைகாட்டும் தீபாவளி அலங்காரதீபம்
பிதுர்கடன் தீர்த்தல் கடமையெனக்காட்டும் கார்த்திகைத்தீபம்
மாவீரர் போற்றித்தாயகம் மீட்போம் எனும்அஞ்சலித்தீபம்
தீபஒளியே நீடுவாழ்க! தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் வாழ்க!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading