புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

விடியாத இரவொன்று

பகலொன்று முடிந்தால்தான் பளபளக்கும் மின்மினி
நகர்ந்திடும் காலம் நல்லதே பிறக்கும்
அகத்தினில் அனலாய் அரும்பட்டும் துணிவு
சுகத்தினை எதிர்பார்த்து சூனியமாக்காதே வாழ்வை
நிலவொன்று தெரியும் நிம்மதி கிடைக்கும்
அலகுகள் கொண்டே அடுக்குகின்றன பறவைகள்
குச்சி குச்சியாய்க் குட்டிச் சேகரிப்பு
உச்சாணிக் கொப்பினில் உல்லாசம் காண்கின்றன
நல்ல பாடம் நமக்கும் சொல்லுதே
வல்லமை கொண்டால் வசந்தமும் வீசும்
முயன்றேதான் பார்த்துவிடு முடியும் உன்னால்
அயற்சி வேண்டாம் அரும்பாடு பட்டால்
அடிமேல் அடிஅடித்து அம்மியை நகர்த்தலாம்
விடியும் ஒருநாள் விரட்டுவாய் இருளை!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு பாராட்டுகள்.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் வாழ்த்துகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading