நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

விடியாத இரவொன்று

பகலொன்று முடிந்தால்தான் பளபளக்கும் மின்மினி
நகர்ந்திடும் காலம் நல்லதே பிறக்கும்
அகத்தினில் அனலாய் அரும்பட்டும் துணிவு
சுகத்தினை எதிர்பார்த்து சூனியமாக்காதே வாழ்வை
நிலவொன்று தெரியும் நிம்மதி கிடைக்கும்
அலகுகள் கொண்டே அடுக்குகின்றன பறவைகள்
குச்சி குச்சியாய்க் குட்டிச் சேகரிப்பு
உச்சாணிக் கொப்பினில் உல்லாசம் காண்கின்றன
நல்ல பாடம் நமக்கும் சொல்லுதே
வல்லமை கொண்டால் வசந்தமும் வீசும்
முயன்றேதான் பார்த்துவிடு முடியும் உன்னால்
அயற்சி வேண்டாம் அரும்பாடு பட்டால்
அடிமேல் அடிஅடித்து அம்மியை நகர்த்தலாம்
விடியும் ஒருநாள் விரட்டுவாய் இருளை!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு பாராட்டுகள்.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் வாழ்த்துகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan