சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

விடியாத இரவொன்று

இருளோடு இருளாக
இழந்தைவைகளை சுமந்த படி
விடியாத இரவு ஒன்றில்
படகு ஏறி கரை கடந்தேன்
தாய் மண் தவிப்பு நெருப்போடு

இறுதி சமர் காலமதில்
ஒட்டிக்கொண்ட உறவெல்லாம்
சிதறும் படி குண்டு மழை
கூக்குரல் கேட்காத வெடியோசை
விடியாத இரவு ஒன்றில்
உயிர்பிச்சை பெற்ற மகன்
கரை கடந்தான் படகேறி

ஆண்டு பல கடந்தோடி
அழியாத நினைவெல்லாம்
சுமக்கின்றான் விடியாத இரவோடு
விடி வெள்ளி காண்பதற்கு!!!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading